search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையங்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
    • சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    அதே போல தமிழகத்தில் 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டன. உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டங்களில் முக்கிய விளைபொருட்களை ரெயில் பயணிகளுக்கு தரமாகவும் குறைவான விலையில் கிடைக்கும் வகையிலும் இந்த கடைகள் செயல்படும்.

    சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ரெயில் நிலையங்களில் அந்த பகுதியில் உள்ள முக்கியமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் பல ரெயில் நிலையங்களில் ஒரு பொருள் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் சாதாரண ரெயில் பெட்டிகள் முழுமையாக நீக்கப்பட்டு அனைத்தும் நவீன பெட்டிகளாக மாற்றப்படுகிறது. சென்னை-கடற்கரை-எழும்பூர் 4-வது ரெயில் பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் கடற்கரை-வேளச்சேரி வரை மின்சார ரெயில் சேவை தொடங்குகிறது.

    சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 2 புறநகர் ரெயில்கள் மே மாதம் முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி நாளை மாலை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.

    சென்னை:

    முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன.

    இந்தத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி-மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலைபடுத்தும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

    நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

    இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி நாளை மறுநாள் (26-ந்தேதி) தொடங்கி வைக்க உள்ளாா்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்கள் 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரெயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரெயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரெயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

    தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரெயில் நிலையங்கள், தென் மேற்கு ரெயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரெயில் நிலையங்கள் என 34 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரெயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரெயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரெயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரெயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

    இந்தப் பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.


    இந்தியாவில் 2 முதியோா் நல மையம் அமைக்கப்படும் என்று 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு 9 ஏக்கா் நிலத்தை கொடுத்து, தேசிய முதியோா் நல மையம் அமைய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிரத்யேகமாக முதியோருக்காக மருத்துவமனை அமைந்துள்ளது.

    உளுந்தூா்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. மத்திய அரசின் 60 சதவீத நிதியிலும், மாநில அரசின் 40 சதவீத நிதியிலும் கட்டப்படவுள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ரூ. 23.75 கோடியில் அமைய உள்ளன.

    இந்தப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

    அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.75 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 25 கோடியில் கட்டப்பட உள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் என 10 பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கட்டி முடிக்கப்பட்ட ரூ. 313.60 கோடி மதிப்பீட்டிலான கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்க உள்ளாா்.

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    • அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது.
    • நடைமேடைகள் நீளத்தை அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும்.

    தென்காசி:

    தென்காசியில் 540 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள், 507 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடை, கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் 405 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை, பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீட்டர் நீளம் கொண்ட 2 நடை மேடைகளும், அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளது.

    நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு லைன், ஒரு வி.ஐ.பி. லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரெயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற நிலையங்களில் இல்லை.

    இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    தற்போது நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை - தாம்பரம் ரெயில் 17 பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில்வே கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். எனவே நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது
    • கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ரெயில் நிலையம் மாவட்ட மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது. இந்த வசதி ஊனமுற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய் பட்டவர் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உதவியாக இருந்து வந்தது. இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    பின்னர் ரெயில்வே துறை இந்த சேவையை கொரோனா காலகட்டத்தில் திடீரென நிறுத்தி விட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பில் நான் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த கோரிக்கையின் பயனாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிக்காக ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் நடந்து வருவதா கவும் வெகு விரைவில் இந்த வசதி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வரும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் தெரி வித்துள்ளார். இந்த வசதி வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இந்த வசதி வரும் போது அதன் கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சில ரெயில் நிறுத்தங்களில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லை செல்லும் போது கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் வரும் புதன்கிழமை முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 16791/16792 நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை என 7 ரெயில் நிலை யங்களில் நின்று சென்றது. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் அந்த ரெயில் தனது இயக்கத்தை தொடங்கிய போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அளிக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 2 ஆண்டுக்கும் மேலான தொடர் கோரிக் கையை ஏற்று கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வர்த்தகம் சார்ந்து கேரளாவிற்கு நிறைய பேர் பயணிப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    • நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    புதுடெல்லியில் நேற்று ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்களை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய ரெயில்வேயில் தினமும் சுமார் 1.8 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களுக்கு ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் போதிய உணவு வசதிகளை வழங்குவதற்கும், அவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட்டரிங் சேவைகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்வது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் கேட்டரிங் வணிகத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களும் தொடங்கப்பட்டுள்ளது.

    நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. 473 ஜோடி ரெயில்களில் பேன்ட்ரி கார்கள் அல்லது சிறிய பேண்ட்ரிகள் மற்றும் 706 ஜோடி ரெயில்களில் ரெயில்-பக்க விற்பனை வசதியுடன் உள்ளது.

    இந்திய ரெயில்வேயின் ஜன் ஆஹார்ஸ் விற்பனை நிலையங்கள், உணவு பிளாசாக்கள் மற்றும் சிற்றுண்டி அறைகள் உள்பட 9,342 சிறிய மற்றும் 582 முக்கிய நிலையான அலகுகள் உள்ளன.

    ரெயில்களின் கேட்டரிங் சேவைகளை பிரித்து, உணவு தயாரித்தல் மற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றுக்கு இடையே முதன்மையான வேறுபாட்டை உருவாக்குவதன் மூலம் ரெயில் பயணிகளுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன், இந்திய ரயில்வே ஒரு கேட்டரிங் கொள்கையைக் கொண்டுள்ளது.

    கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கம்லாபதி, குஜராத்தில் காந்திநகர் மற்றும் கர்நாடகாவில் சர் எம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய மூன்று ரெயில் நிலையங்கள் இதுவரை நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த மூன்று நிலையங்களில் இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், இந்திய ரெயில்வேயில் அமிர்த் பாரத் நிலைய திட்டம் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் நீண்ட கால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் மொத்தம் 160 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் சில ரெயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக ரெயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் உள்ளன.

    ஆனால் இவற்றில் சில ரெயில் நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரெயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, பூங்கா, ஆவடி, பெருமாள்பூர், கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரெயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    முக்கியமான ரெயில் நிலையங்களில் நடைமேடையின் ஒரு பக்கத்தில் டிக்கெட் கவுண்டர்கள் இருக்கும் நிலையில் நடைமேடையின் மறுபக்கத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் அமைக்கப்படும்.

    மேலும் இது சிக்கன நடவடிக்கையாகவும் உள்ளது. எழும்பூர், கடற்கரை, மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களால் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திருச்சி:

    நாடு முழுவதும் குறைவான கட்டணத்துடன் நிறைவான பயணத்தை அளிப்பதில் ரெயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினருக்கும் ரெயில் சேவை வசதியாக உள்ளது.

    ரெயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையின் பேரில் இங்கு உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    குறிப்பாக இந்த உணவகங்களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த உணவுப் பொருட்களின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட இருக்கிறது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இவற்றின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி சட்னி சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13-ல் இருந்து ரூ.20 ஆகவும், மசால் தோசை ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், மெதுவடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17-ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    மேலும் வெஜிடபிள் சாண்ட்விச் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தக்காளி சாதம் ரூ.14-ல் இருந்து ரூ.20 ஆகவும், பொங்கல் ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், புளிசாதம் ரூ.21-ல் இருந்து ரூ.35 ஆகவும், தயிர் சாதம் ரூ.18-ல் இருந்து ரூ.30 ஆகவும், எலுமிச்சை சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தேங்காய் சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாம்பார் சாதம் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும் சைவ குருமாவுடன் இரண்டு பரோட்டாக்கள் அல்லது நான்கு சப்பாத்திகள் ரூ.29-ல் இருந்து ரூ.45 ஆகவும் விலை உயர்கிறது.

    இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவு வகைகளின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால் விலைப்பட்டியல் இதுவரை தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரவில்லை. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் வரும். வந்தவுடன் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றார்.

    நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாடம் ரெயில் சேவையினை அதிகம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த உணவுப்பொருட்களின் விலை உயர்வு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    • அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சேலம்:

    அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சின்னசேலம்

    மேலும் சேலம் கோட்–டத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, போத்தனூர், ஊட்டி, குன்னூர், கரூர், ெபாம்மிடி, சின்னசேலம், திருப்பத்தூர், சாமல்பட்டி, மொரப்பூர் ஆகிய 14 ரெயில் நிலையங்களும் சேலம் சந்திப்புடன் இணைந்து மேம்படுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×